Friday, April 4, 2008

தலைவர் பேச்சு - புரியல, தயவு செஞ்சு விளக்கவும் (TBCD மண்ணிக்கவும்).

தலைவர் பேச்சு - புரியல, தயவு செஞ்சு விளக்கவும் (TBCD மண்ணிக்கவும்).

தலைவா,

நீங்க என்னிக்கோ எப்பவோ தான் எங்களுக்கு சார்பா உருப்படியா பேசுறீங்க...

நீங்க பாட்டுக்க "கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார்" னு மொட்டைய சொல்லிட்டு போய்டீங்க..

இங்க பாருங்க, யாஹூ காரன் எப்படி எழுதுரானு

http://in.tamil.yahoo.com/News/Regional/0804/04/1080404029_1.htm

எனது மரியாதைக்குரிய தலைவர் ஒருவர், உயர் பதவியில் இருந்தவர் (எஸ்.எம்.கிருஷ்ணா ) மும்பையிலிருந்து தனது மாநிலத்துக்கு சென்று அவரும் பிரச்சனையை தூண்டி வருகிறார்.

நம்ம தமிழ்மண நண்பர் எப்படி சொல்லுராருனா

http://girirajnet.blogspot.com/2008/04/blog-post_4985.html

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர் (எதியூரப்பா). ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் வித்த்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி (பாஜக) சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.காரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல்.

இப்படி ஆளு ஆளுக்கு ஒன்ன சொல்லுறாங்க..
இப்ப பாருங்க உங்களால மதிக்க படுற தலைவரு யாருனே தெரியாம போச்சு...

ஆப்பு ஆறுமுகம் கேள்வி:

நம்ம மாதிரி சாமானியனுக்கு பேர சொன்னாலே கர்நாடக முதலமைச்சர் தெரியாது... இதுல ஆந்தையார் மாதிரி சொல்லுகிர்ரர்..
குசேலன் படம் ப்ரோடச்சன் ஸ்டேஜ் ல இருப்பதும் கூட ஒரு காரணமாக இருக்குமோ ??

சரி விடுங்கப்பா... அரசியலில இதெல்லாம் சகஜம்... யாரும் யாரையும் பகைச்சுக்க மாட்டாங்க...

Thursday, April 3, 2008

தாங்க முடியாத குசேலன் சஸ்பென்ஸ்...


அஞ்சுமே தலைவருக்குதானோ ??
நாலா இருக்குமோ ??
இல்ல ரெண்டே ரெண்டு தானா ??
அநேகமா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருந்திருமோ..?
இல்ல எதுவுமே இல்லாம பெரிய புரட்சியா இருக்குமோ ?

இப்படியே ராப் பகலா யோசிச்சிட்டு இருக்கேன்... தூக்கம் போய் ரெம்ப நாள் ஆச்சு !
கண்ணு எல்லாம் செவந்து போச்சு...எங்க அப்பு நைட்டு எல்லாம் குவார்ட்டர் அடிசியாடா நாயே னு என்ன அடிக்க வாரார்... ( குவர்டார் எல்லாம் 10 நிமிசத்துக்கு கூடா வராதுன்ன்ற ஜெனரல் நாலட்ஜ் கூட அந்த ஆளுக்கு இல்ல )


அத வாசு சார் சொன்னத படிச்சு கிட்டு இருக்குறப்பவே நான் சீட் நுனிக்கு வந்திட்டேன்.
சார், தயவு செஞ்சு சொல்லிடுங்க சார்... பிளீஸ் .. எனக்கு தலையே வெடிச்சுடும் ...

மொத்தமே நாப்பது மார்க்குக்கு பதில் எழுதிட்டு பாஸ் மார்க் வந்துடுமோ வராதோ ன்ற மாதிரி இருக்கு... எனக்கு பொறுமை இல்ல சார்.

அதுல மொத்த பாட்டு அஞ்சு னு வேற சொல்லிடீங்க... அதுல எங்க சூப்பர் ஸ்டார் க்குனு எத்தன னு மட்டும் சஸ்பென்ச்னா எம்மாம் பெரிய திரில்... படமும் சீக்கிரம் வந்து தொலைக்கிறது... வந்தாலும் பென்சன் காசுல லோனோ, தீவாளி போனசோ வந்தா தான் டிக்கெட் வாங்கி பாக்க முடியும்...

விடுங்க சார்... நான் கலைஞர்-ட்டயோ இல்ல அம்மாட்டயோ கேட்டு தெரிஞ்சுக்கிறேன் ... எப்படியும் மொத 'சோ' அவங்களுக்கு தானே.. பாவம் முதலமைச்சரா இருந்ததுக்கும், இருக்கிறதுக்கும் எங்களால தான் தண்டனை தர முடியாது .... அந்த விஷயத்துல நீங்க பெரிய ஆளுங்க. ஓட்டும் போட்டும் 'படத்த பாரு' னு குட்டும் வைப்பீங்க...

ரஜினி சாரோட ஈ மெயில் அட்ரச்ஸ் ஆவது கொடுங்க சார்... நான் அவர்ட்ட்யாவது கேட்டுக்கிறேன்... அவரு உங்கள மாதிரி பிகு பண்ண மாட்டாரு ...

நீங்களாவது சொல்லுங்க ?
என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு ?

ஆப்பு ஆறுமுகம் கேள்வி :

ரீ மேக்குக்கே இந்த அலும்பா ??? நீங்க எல்லாம் சொந்தமா கத 'பண்ணுனின்கனா ??

(குங்குமம் மார்ச் ௨0)