Saturday, June 14, 2008

தசாவதாரம் என்ற குருவி பார்ட் - 2 விமர்ச்சனம் !

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ... கமல் பத்து வேடத்துல நடிக்கிறார் , எழுபது கோடி பொருட் செலவு ... இருந்தாலும் எப்பவும் போல மற்ற எல்லா படங்களையும் போல இது ஒரு சாதா தமிழ் படம் தான் .

இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... சும்மா எல்லாத்தையும் நாமே செய்வோம்-தர வெட்டி பெருமைய தவிர வேறொன்றும் இல்லை.

உதாரணம், படம் முடிவில் கடைசியாக உணர்ச்சிவச பட்டு பேசும் தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டி மனம் உருகும் பேச்சு கூட - அந்த பாட்டி கமல் தான் என்பதால் அந்த கட்சி மனதை சற்றும் பாதிக்கவில்லை. அதுவே மற்றொரு உண்மையான தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டியா இருந்தால் நம்மிடம் அது ஏற்படுத்தும் உணர்ச்சிகள மிகவும் அதிகமாக இருந்திருக்கும்.

படத்தில் வரும் மற்றொரு பாட்டி - அசின். அவர் சதா லொட லொட என்று பேசி-கொன்றிருக்கிறார். அவர் வரும் பேச்சுகள் சலிப்பை தருகின்றன.

கமல் அமரிக்காவில் அம்பது அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்க்றார்; விழும்பொழுது சரக்கு ஏற்றி செல்லும் லாரி மேல் விழுகிறார். அந்த சரக்குடன் அவர் விமானத்தில் சரக்கு ஏற்றப்படும் பகுதியில் ஏற்றபடுகிறார். கேபின் பிரஷர், ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் அதிலிலேயே அமெரிக்கா வில் இருந்து இந்திய வரை பயணிக்கிறார். பின்னர் அவர் வில்லனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடும் பொழுது, பாலத்தில் இருந்து குதிக்கிறார். மீண்டும் அவர் விழும் இடம் - மற்றொரு லாரி. அப்புறம் அவர் வில்லனால் வண்டியில் துரத்தப்படும் பொழுது, தள்ளு வண்டியில் பயணிக்கிறார். அந்தோ பரிதாபம், எப்பவும் போல, தள்ளு வண்டி சென்றவுடன் ரயில் வே கேட் பூட்டபடுகிறது. வில்லன் ஆவலுடம் காத்திருக்க, கமல் அசின் மற்றும் சாமி சிலை உடன் ஓடும் ரயிலில் தொற்றுகிறார். பின் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கிறார். மற்றொரு முறை கமல் அசினுடன் மோட்டார் பைக்கில் பயணிக்க, அது மோதி லாரிக்கு அட்டையில் பயணம் செய்கிறார். நான் குருவி படம் பாக்குற தேட்டருக்கு வந்துட்ட்னானு ஒரு நிமிஷம் எனக்கு டவுட் ஆய்டிச்சு.

படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது .

அமெரிக்காவில் ஒருவர், கமல் கண்டுபிடிக்கும் விச மருந்து திட்டத்தை வாங்க லஞ்சம் கொடுக்கிறார். அங்கும் லஞ்சம் பெட்டியில் வைத்து கட்டு கட்டாக அமெரிக்க டாலராக கொடுக்க படுகிறது !!!

நூறு பேர் சேர்ந்து அசினை கற்பழிக்க முயல்வது, அவர்களை கமல் பந்தாடுவது, லிப்ட் டில் கமல் வைத்த்ருக்கும் பெட்டியை மற்றொருவர் தவறுதலாக அவருக்கே தெரியாமல் எடுத்து செல்லுவது , வில்லன் கமல் நூறு கிலோ மீட்டர் ஓடினாலும், பைக், கார் எல்லாவற்றை ஒட்டி மோதினாலும், நூறு மாடியில் இருந்து குதித்தாலும் அனாயசம்க எந்த அடியும் இல்லாமல் - முக்கியமா சன் கிளாஸ் கூட கீழே விழுகாமல் ஜாலியாக அடுத்த அடிக்கு ரெடி ஆவது ....இப்படி எந்த வகையிலும் இது மற்ற மசாலா படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கடுப்படிக்கிறது .

அதுவும் வில்லன் கமல் - அபோகாளிப்டோ - காட்சிகளை நினைவு படுத்துகிறார். ஓடி ஓடி விஞ்ஞானி கமலை துரத்துகிறார். தான் செத்தாலும் பரவாயில்லை என, விரட்டுகிறார்.

விஞ்ஞானி கமல்: "இந்த மருந்து தப்பி கொஞ்சம் சூட இருக்கு. அத கொஞ்சம் குளிரான எடத்துல வைக்கணும். எதாவது ஐடியா கொடேன்
பெண்: பிரிஜ்ள வச்சிடலாமே .
விஞ்ஞானி கமல்: வெறி குட் ஐடியா.

மொத அஞ்சு பத்து நிமிசம் மட்டும் படம் சூப்பருங்க !
அப்புறம் தெலுகு மாதிரி தமிழ் பேசும் கமல் கலக்கல்.

அப்புறம் ஒரு கமல் முஸ்லீம், ஒரு கமல் சீக், ஒரு கமல் ஹிந்து, ஒரு கமல் கிறிஸ்டியன் ...இப்படி மத நல்லிணக்க மேட்டர் வேற. அப்புறம் ஜார்ஜ் புஷ் அமெரிக்காவில் காரில் பயணம் செய்யும் பொழுது ரோட்டில் ரெண்டு பக்கமும் மக்கள் கூட்டமாக நின்று அவருக்காக கை அசைக்கிறார்கள். ஜார்ஜ் புசுக்கு நம்ம ஊர் கலாச்சாரம் கூட கற்று கொடுக்கப்பட்டு விட்டது ...

இப்படி பத்து கமல் இருக்குரதாலா, எல்லா கமலுக்கும் ஜோடியா, மொத்தம் பத்து பொண்ணுங்க இருந்தா படம் நல்லா இருந்திருக்கும் !!

Thursday, June 12, 2008

தசாவதாரம் படம் பார்ப்போர் - உணர்ச்சி கருத்துகள்


இதே மாதிரி உங்க ரசிக விசிலடிச்சான் குஞ்சுகளும் வந்துட்டா நல்ல இருக்கும் !!






எப்படிப்பா உன்னால மட்டும் முடியுது ?? ஒரிஜினல் ஓட சாயலே தெரியாம படம் பண்ணிருக்க !!








எங்க காலத்துல சீடி, டிவிடி, இன்டர்நெட் இப்படி எதுவுமே கிடைக்கல. சொந்தமா யோசிக்கவேண்டியதா போச்சு ...





இந்த போட்டோவுக்கு நீ 'ஓட்டி' கமெண்ட்டு எழுதிடுவியாடா??






தலைவா, கருப்பு சட்டையோட வந்து உங்கள மடக்கிடோம்ள. நம்மள பத்தி எதுவும் பேச முடியாது !!!

நன்றி
படங்களை வெளியிட்ட நன்றிக்குரியவர் சின்னகுட்டி