Tuesday, May 12, 2009

அழகிரி அண்ணே, இந்த கொடுமைய பாருண்ணே !!

அழகிரி அண்ணே, இந்த கொடுமைய பாருண்ணே !!

நாங்களும் எங்க ஊரு கார பொறம்போக்குகளும் "லெனின் , தொழிலாளர்" இந்த மாதிரி வார்த்தைக்கு மயங்கி அருவா சுத்தியளிலேயே ஓட்டு குத்தி பழக்க பட்ட ஜென்மங்க. ஆனா இப்ப அப்படி இல்லண்ணே. ஆயிரம் ஆயிரமா அள்ளி தர்ற நீ எங்க உண்டியல குழலுக்கும் ஆண்டி பயலுக எங்க.

அண்ணே , எங்க ஊரு மதுரை பஸ் ஸ்டாண்டுல ( பஸ் ஸ்டாண்டு எல்லாம் இன்னும் இருக்கானு கேக்க கூடாது. ) இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு. போன தேர்தல் வரைக்கும் நம்ம ஊர சுத்தி இருக்குற எட்டு பட்டியும் மதுரை தொகுதி தான். எப்பவுமே செழிப்பாவே தேர்தல சந்திச்சு பழக்கப்பட்ட ஊரு. முன்னாடி எல்லாம் பிளாஸ்டிக் குடம், டப்பா இப்படி "மூணு பத்து ரூவா " சரக்க கொடுத்து ஓட்டு கேப்பானுங்க. அது பழைய காலம். இப்ப உங்க கிட்ட இருக்குற காசு அளுவுக்கு அப்ப யாரிட்டயாவது இருக்கனும்னா, பிரஸ் வச்சு அடிச்சா தான் உண்டு. அப்படி எதுவும் இல்லாம கவர்மெண்ட்டு அடிச்ச தாள வச்சே இம்புட்டு காசு சேக்க முடியும்னு புரட்சி பண்ணினவன் நீ தான் அண்ணே !!

இந்த தேர்தலுக்கு , இந்த கம்யுநிஸ்த்து பிச்கொத்தேல்லாம் மருதை தொகுதில இருந்தா நல்லதில்லைன்னு ( யாருக்குன்னு கேக்காத அண்ணனே, உனக்கு தான் ) எங்க பத்து பட்டி ஊரையும் எம்பது கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்குற விருதுனகரோட இணைச்சு புட்டாங்க அண்ணே. நீ செய்க்கனும். அது தான்னே எங்களுக்கு முக்கியம். இப்ப அந்த பக்கம் இருக்குற என்னோட சொந்த காரனுங்க எல்லாம் "எங்களுக்கு அண்ணனே மூணு வோட்டுக்கு மூவாயிரம் தந்தாரு, உனக்கு ? "அப்படின்னு கேள்வி கேக்குறப்ப என் மனசு தாங்க மாட்டேங்குது அண்ணே.

வைக்கோ அண்ணன் போன தேர்தலுக்கு நாப்பது பெட்டி வாங்குனாருனு செய்தி வந்துச்சு. அதுல ஒன்ன தெறந்து எங்கள மாதிரி ஆளுக்கு நூறோ எறநூறோ தந்தா கொறஞ்சா போவாரு ?? அவரு மகா கஞ்சன் அண்ணே. அவனுங்க எல்லாம் உங்கள மாதிரி வள்ளலா இருக்க உன்ட்ட ட்யூசன் படிக்கணும் ன்னே . பேச்சு மட்டும் நல்ல பேசுகிறார். எல்லாம் சவடால் பேச்சு தான். இந்த ஆளுக்கு ஒட்டு போட்டா - ஓசி ல ஓட்டு போட்டா என்னைய கேன பய்யன்னு சொல்ல மாட்டனுங்க !!?

விஷய காந்த் அண்ணன் தொப்புள்ள பம்ம்பரம் விட்டாரு, பாகிஸ்தான் தீவிர வாதிகள சுட்டு கொண்டாரு, கரண்டுக்கே சாக்கடிக்க வச்சாரு. இப்படி எதாவது யாருமே மறக்க முடியாம இருக்குறாப்ல கார்த்திக் செஞ்சிருக்காரா அண்ணே ? ஆனா அந்த ஆளுக்கும் எங்க ஒட்டு வேணும்மா. இந்த ஆள பார்த்தா எனக்கு சிரிப்பா வருதுன்னே!!

இப்ப நான் யாருக்கன்னே, ஓட்டு போடுறது!! உனக்கு ஓட்டு போடுரதுக்காகவே பிறந்த உடம்புனே. மொத தடவையா தாத்தா உன்ன நிக்க வச்சு அழகு பாக்குறாரு. ஆனா எங்கள வேற தொகுதி ஆக்கி அழ வச்சிட்டாரே.
எப்படியாவது யாருக்காவது போன் போட்டு - தந்தி அடிச்சு - கடுதாசி போட்டு எங்க தொகுதிய மதுரைக்கு மாத்துனே. இல்லாட்டி என்னை பட்டினி போட்டா பாவம் உனக்கு வந்திரும்ம்னே.

1 comments:

said...

நல்ல ட்ரை ..
adutha pathivu enga thaliva